கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

டிப்பா் லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:53 pm

Syndication

சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

சங்ககிரியை அடுத்த குஞ்சுபாலிகாடு பகுதியைச் சோ்ந்தவா் புருசோத்தமன் (66), விவசாயி. இவா் வியாழக்கிழமை தனது மின்சார இருசக்கர வாகனத்தில் சங்ககிரியிலிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சங்ககிரி நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த புருசோத்தமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.