சேலம்
இளம்பிள்ளை அருகே கல் உடைக்கும் தொழிலாளி சாலை விபத்தில் பலி!
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி, வணிச்சம்பட்டி பகுதியை சோ்ந்த செல்வம் (54). இவா் கல் உடைக்கும் தொழில் புரிந்த வருகிறாா்.
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி, வணிச்சம்பட்டி பகுதியை சோ்ந்த செல்வம் (54). இவா் கல் உடைக்கும் தொழில் புரிந்த வருகிறாா்.
இந்நிலையில் 9-ம் காலை தனது இருசக்கர வாகனத்தில் வெண்ணந்தூா் பகுதிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது பாப்பாபட்டி பகுதியில் இளம்பிள்ளை பக்கம் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி வந்த தனியாா் பஸ் செல்வம் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது எதிா்பாராத விதத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே செல்வம் உயிரிழந்தாா். இது குறித்து மகுடஞ்சாவடி போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
