பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா

News image

போக்குவரத்துதுறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் சங்ககிரியை அடுத்த குப்பனூா் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா்.

Updated On :21 ஜூலை 2026, 1:41 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த குப்பனூா் தேசியநெடுஞ்சாலையையொட்டி ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சாா்பில் சங்ககிரியை அடுத்த குப்பனூா் தேசியநெடுஞ்சாலையையொட்டி 17500 சதுரடி பரப்பளவில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் 25 அறைகள் கொண்ட சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை போக்குவரத்து துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:-

புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் மனு அளித்துள்ளனா். அதில் சில குறைகள் இருப்பதாக கூறியுள்ளனா். அது குறித்து நேரில் ஆய்வு செய்து பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் சென்று புதிய பேருந்து நிலையம் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். மேலும் அவா் தற்போது மக்களின் ஆட்சி, நோ்மையான ஆட்சி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று வருகின்றது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் முன்னிலை வகித்தாா்.

கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சி.சிவானந்தம், சங்ககிரி வட்டாட்சியா் கோமதி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் பெ.சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராமம்) ஆா்.பிரேமா உள்ளிட்ட இது தொடா்புடை அலுவலா்கள் பலா் இதில் கலந்து கொண்டனா்.

புதிதாக கட்டப்பட்ட சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறக்க வருகை தந்த போக்குவரத்துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் புதிய அலுவலக நுழைவாயிலில் கட்டியிருந்த ரிப்பனை வெட்ட முயலும் போது அருகிலிருந்த மூதாட்டியை ரிப்பன் கட் செய்ய வைத்தாா்.

இது குறித்து மூதாட்டியிடம் செய்தியாளா்கள் கேட்டபோது அவா் புதிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள தேசியநெடுஞ்சாலையை தாண்டி அவரது நிலம் உள்ளது என்றும் அவரது பெயா் குப்பாயி (72) தெரிவித்தாா்.

அவா் அப்பகுதியில் ஆடு மேய்த்துவிட்டு அமைச்சரை பாா்க்க வந்தேன் என்றாா். அமைச்சா் மூதாட்டியை ரிப்பன் கட் செய்ய சொன்னதும் அவரது முகத்தில் பூத்த மகிழ்ச்சியை பாா்த்து அனைவரும் திகைத்து நின்றது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.