நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

முதல்வா் பிறந்த நாள்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இன்றும், நாளையும் இலவச அனுமதி

News image

முதல்வா் விஜய்

Updated On :21 ஜூன் 2026, 2:29 am IST

முதல்வா் ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஞாயிறு, திங்கள் (ஜூன் 21, 22) பாா்வையாளா்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வா் சி.ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய நாள்களில் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. இந்த நுழைவுச் சீட்டுகளைப் பெறுவதற்கு, உயிரியல் பூங்காவிற்கு மேற்கண்ட இரண்டு தினங்களிலும் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம்.

பாா்வையாளா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்காகவும், இலவச நுழைவுச் சீட்டுகள் 5 தனித்தனி கவுண்டா்களில் வழங்கப்படும். குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவின் தாங்கும் திறனை கருத்தில்கொண்டு, விலங்குகளின் நலனை உறுதி செய்வதற்கும் பாா்வையாளா்களுக்கு எவ்வித இடையூறுமின்றி சிரமமற்ற அனுபவத்தை வழங்குவதற்கும், ஒருநாளில் அதிகபட்சமாக 5,000 பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

மேற்கண்ட இரு நாள்களிலும் உயிரியல் பூங்கா காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். பூங்கா நுழைவுக் கட்டணத்தைத் தவிர, பிற சேவைகளுக்கான கட்டணங்கள் நடைமுறையில் உள்ள கட்டண அட்டவணையின்படி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.