விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆதிதிராவிட மாணவியர்க்கான ஊக்கத்தொகை திட்டம் வங்கியில் கணக்கு தொடங்கி ஓராண்டாகியும் பணம் கிடைப்பதில் தாமதம்!

மதுரை, ஜூலை 23: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியரின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் கொண்டுவரப்பட்ட (எண்ழ்ப்ள் ஐய்ஸ்ரீங்ய்ற்ண்ஸ்ங்ள்) திட்டத்த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:54 am

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை, ஜூலை 23: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியரின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் கொண்டுவரப்பட்ட (எண்ழ்ப்ள் ஐய்ஸ்ரீங்ய்ற்ண்ஸ்ங்ள்) திட்டத்திற்காக வங்கியில் கணக்குத் தொடங்கி ஓராண்டாகியும் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

 பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு மூலம் கடந்தாண்டு ஆதிதிராவிடர் மாணவியருக்கான கல்வி ஊக்கத் தொகை வழங்கும் புதிய திட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது.

 இத் திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடி மாணவியருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

 இதையொட்டி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடந்தாண்டு இத் திட்டத்தின்கீழ் மாணவியர்கள் ஏராளமானோர் தெரிவு செய்யப்பட்டனர்.

 அவர்களது பெயர் அடங்கிய ரேஷன் கார்டுகளின் நகல்கள் பெறப்பட்டு, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர் மூலம் அந்தந்தப் பகுதி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவியர் மற்றும் அவரது பெற்றோர் பெயரில் கணக்குத் தொடங்கப்பட்டது.

 மாணவிகள் என்பதால் பணம் இருப்பு வைப்பதற்கான நிபந்தனை ஏதுமின்றி இக் கணக்கு தொடங்க வங்கியினர் அனுமதித்தனர்.

 தற்போது கணக்குத் தொடங்கி ஏறக்குறைய ஓராண்டான நிலையில், சம்பந்தப்பட்ட மாணவியரின் கணக்கில் இதுவரை பணம் வந்து சேரவில்லை.

 இத் திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகையானது மத்திய அரசின் நிதி மூலம் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்கப்பட்டு, பின்னர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு ஈ.சி.எஸ். முறையில் நேரடியாக கணக்கில் வரவு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 ஆனால், ஓராண்டாகியும் பணம் தங்களது கணக்கில் வராததால் பெற்றோர்கள் அடிக்கடி வங்கிக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.

 மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு இத்திட்டத்தின்கீழ் ஆயிரக்கணக்கான மாணவியர் சேர்க்கப்பட்டு, வங்கிகளில் கணக்குத் தொடங்கப்பட்டது.

 இதனிடையே, இந்த ஆண்டும் பயனாளிகளுக்கான பட்டியலைத் தயார் செய்யும்படி அந்தந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 ஏற்கெனவே கணக்குத் தொடங்கி ஓராண்டாகியும் பணம் பரிவர்த்தனை ஏதும் நடைபெறாத நிலையில், தற்போது அடுத்த பட்டியலையும் தயாரித்து கணக்குத் தொடங்கச் செல்லும்போது வங்கியினர் பலர் எதிர்ப்புத் தெரிவிப்பதாக தலைமையாசிரியர்கள் வட்டாரங்கள் கவலை தெரிவித்தன.

 திட்டம் தொடங்கப்பட்டு உரிய பலன் மாணவிகளுக்குச் சென்றவடைதில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டு வருவது மாணவியரின் பெற்றோரையும் அதிருப்தியுறச் செய்துவருகிறது.

 இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது இத் திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குப் பணத்தை அனுப்பும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் மாணவிகளின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.