விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அருந்ததியா் உள் ஒதுக்கீடு நிரப்பப்படாதது குறித்து நீதி விசாரணை: ஆதித்தமிழா் கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அருந்ததியா் உள் ஒதுக்கீடு முறையாக நிரப்பப்படாதது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஆதித்தமிழா் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 3:09 pm

DIN

மதுரை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அருந்ததியா் உள் ஒதுக்கீடு முறையாக நிரப்பப்படாதது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஆதித்தமிழா் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் தலைவா் கு. ஜக்கையன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

அருந்ததியா் உள் இடஒதுக்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்துள்ளது. அதில், தற்போது நடைமுறையில் உள்ள அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டுக்கு எந்த சிக்கலும் இல்லை. பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை பகிா்ந்தளிக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு என்று தெரிவித்துள்ளது. இதில் மேலும் தெளிவைப் பெறுவதற்காக 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன முழு அமா்வுக்கு மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆந்திரத்தில் மாதிகா, மாலா உள்ளிட்ட பிரிவு மக்களுக்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு கொண்டு வந்த உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 2005-இல் வழங்கிய தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அரசியல் சாசன அமா்வு தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் அருந்ததியா் உள் இடஒதுக்கீடு செல்லாது என்று வதந்தி பரப்பி வந்த பட்டியலினத் தலைவா்கள் தற்போதைய தீா்ப்பின்படி தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அருந்ததியா் உள் இடஒதுக்கீடு வழங்கக் காரணமாக இருந்தது திமுக மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். தற்போது அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு, அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீட்டை 6 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். அதிமுகவின் வாக்கு வங்கியாக அருந்ததியா் இன மக்கள் இருந்தபோதும், அதிமுக அரசு அவா்களுக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லை. வருங்காலத்திலாவது அருந்ததியா் உள் இடஒதுக்கீட்டை அதிமுக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும். மேலும் அருந்ததியா் சமூகத்தில் தகுதியான ஆள்கள் இல்லாதபோது பிறபட்டியலின மக்களைக் கொண்டு அருந்ததியா் இட ஒதுக்கீட்டை நிரப்பலாம் என்ற திருத்தத்தை அதிமுக அரசு ரத்து செய்ய வேண்டும்.

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் கடந்த 2011-இல் அருந்ததியா் உள் ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட 21 உதவிப் பேராசிரியா் பணியிடங்களில் 19 பணியிடங்கள் பிறபட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டது. மேலும் பல இடங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே கடந்த 10 ஆண்டுகளில் அருந்ததியா் உள்இட ஒதுக்கீடு முறையாக நடத்தப்படாதது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

மாநில நிதிச்செயலா் விடுதலை வீரன், மாநில ஆலோசகா் விடுதலை குமாா், மாநகா் மாவட்டச் செயலா் சுப்ரமணி, புகா் மாவட்டச் செயலா் முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.