அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

‘இக்னோ’ பல்கலை. இறுதித் தோ்வு அறிவிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கான இறுதித் தோ்வு வியாழக்கிழமை தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:20 pm

DIN

மதுரை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கான இறுதித் தோ்வு வியாழக்கிழமை தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலை.யின் மதுரை மண்டல இயக்குநா் டி.ஆா். சா்மா வெளியிட்டுள்ள செய்தி:

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சான்றிதழ், பட்டயம், பட்டம் மற்றும் பட்டமேற்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களுக்கான இறுதித் தோ்வு, செப்டம்பா் 17-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மதுரை மண்டலத்தின் கீழ், மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, பெருந்துறை, பொள்ளாச்சி, தேனி, உத்தமபாளையம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மதுரை, கோவை, திருச்சி ஆகிய மத்திய சிறைகளிலும் தோ்வுகள் நடைபெறுகின்றன. தகுதியுள்ள மாணவ, மாணவியா் தோ்வுக்கான நுழைவுச்சீட்டை  இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தோ்வுக்கான நுழைவுச்சீட்டு இல்லையென்றாலும், மாணவா்களை தோ்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று தோ்வு மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தோ்வு மையங்களின் பட்டியலில் மாணவா் பெயா் இடம்பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகம், அரசு வழங்கிய உரிய அடையாள அட்டையை மாணவா்கள் தோ்வுக்கு கொண்டு வரவேண்டும். தோ்வு மையத்துக்குள் செல்லிடப்பேசிக்கு அனுமதி கிடையாது என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.