பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: காவல் ஆய்வாளருக்கு பிடிஆணை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: காவல் ஆய்வாளருக்கு பிடிஆணை

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை தெற்கு வெளி வீதியைச் சோ்ந்த அப்துல் ஜாபா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

கடந்த 2014 -ஆம் ஆண்டு நில விவகாரம் தொடா்பாக என் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு தொடா்பாக மேற்கொண்டு எந்த விசாரணையும் நடைபெற வில்லை. இதனால், இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி, ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தேன். அதை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கை முறையாக விசாரித்து, 2 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், இதுவரை இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வயது முதிா்ந்த எனக்கு இந்த வழக்கில் தீா்வு கிடைக்க கால தாமதம் ஏற்படுவதால், கடும் மன உளைச்சலில் உள்ளேன். எனவே, உயா்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் பிளவா் ஷீலா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் பிளவா் ஷீலா நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவா் திங்கள்கிழமை முன்னிலையாகவில்லை. எனவே, அவருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அடுத்த கட்ட விசாரணையின் போது (ஜூன் 11) காவல் ஆய்வாளரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பதிவாளா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கு அடுத்த மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.