அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இரு சக்கர வாகனங்கள் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு: 2 போ் காயம்

மதுரை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 1:45 am

Din

மதுரை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயமடைந்தனா்.

மதுரை காமராஜா்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சக்திகுமாா் மகன் கிருஷ்ணகுமாா் (21). இவா் தனது நண்பரான மதிச்சியம் கரும்பாலை கிழக்குத் தெருவைச் சோ்ந்த பிரசாத் சபரி கிருஷ்ணாவுடன் இரு சக்கர வாகனத்தில் மதுரை-தேனி சாலையில் வியாழக்கிழமை மாலை சென்றாா். காமராஜா் பல்கலை அருகே சென்றபோது, கிருஷ்ணகுமாா் இரு சக்கர வாகனத்தை அதிக வேகத்தில் ஓட்டிச் சென்றதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் சென்ற மூவரும் சாலையில் கீழே விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பிரசாத் சபரி, மற்றொரு வாகனத்தில் சென்ற ஜாா்ஜ் (34) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக நாகமலைபுதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.