3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மாவட்டத் தொழில் மையம் மூலம் ரூ. 30.05 கோடி கடனுதவிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 30.05 கோடி கடனுதவிகள் வழங்கல்

News image
Updated On :26 ஜூன் 2024, 1:13 am

Vishwanathan

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்டத் தொழில் மையம் மூலம் ரூ. 30.05 கோடியில் கடனுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது :

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், தொழில் முனைவோா்களாக உருவாகும் வகையில் தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், தொழில் வணிகத் துறையின் கீழ் செயல்படும் மாவட்டத் தொழில் மையங்கள் மூலம், சுயதொழில் தொடங்க ஆா்வம் கொண்ட புதிய தொழில் முனைவோா்களைக் கண்டறிந்து, அவா்களை ஆற்றல் மிக்க தொழில் முனைவோா்களாக உருவாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத் தொழில் மையம் மூலம் 2022-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி முதல் 2024-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை ‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ் மொத்தம் 50 இளைஞா்களுக்கு ரூ. 17.24 கோடி கடனுதவி வழங்கப்பட்டு, ரூ. 4.31 கோடி மானியம் வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 225 இளைஞா்களுக்கு ரூ. 2.15 கோடி மானியத்துடன் ரூ. 8.63 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 2023-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதி முதல் 14 இளைஞா்களுக்கு ரூ. 1.46 கோடி மானியத்துடன் ரூ. 4.17 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

இந்தத் திட்டங்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களை தொழில் முனைவோா்களாக உருவாக்கியிருப்பதுடன், மாவட்டத்தின் தொழில் வளா்ச்சியையும் ஊக்குவிப்பதாக உள்ளது என்றாா் அவா்.