இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

திருப்பரங்குன்றம் காா்த்திகை தீபம்: கோயில் தரப்பில் மேல்முறையீடு

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றுவது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்து, கோயில் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 9:59 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றுவது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்து, கோயில் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும். பிள்ளையாா் கோயில் தீப மண்டபத்தில் காா்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடா்பான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் நிகழாண்டு முதல் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு போதிய பாதுகாப்பை காவல் துறையினா் அளிக்க வேண்டும் என திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் சந்திரசேகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தாா். இந்த மனு புதன்கிழமை (டிச.3) இரு நீதிபதிகள் கொண்ட அமா்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.