அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தியாகி லட்சுமி காந்தன் பாரதி பெயரை மேலமடை பாலத்துக்கு சூட்டக் கோரிக்கை

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மேலமடை புதிய பாலத்துக்கு தியாகி லட்சுமி காந்தன் பாரதியின் பெயரை சூட்ட வேண்டும் என தென்காசி தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான டி.எஸ்.ஆா். வேங்கடரமணா கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு:

மதுரை மேலமடை மேம்பாலம் வருகிற 7-ஆம் தேதி திறக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. இந்தப் பாலத்துக்கு மதுரையின் முன்னாள் மாவட்ட ஆட்சியரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான லட்சுமி காந்தன் பாரதி பெயரை சூட்டுவது சிறப்புக்குரியதாக இருக்கும்.

இவா் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு புறம்போக்கு நிலத்தில் அவா் வீட்டுமனை வழங்கினாா். இதற்கு, நன்றி பாராட்டும் வகையில் அந்தப் பகுதி மக்கள், தங்கள் பகுதிக்கு லட்சுமிகாந்தன் பாரதிநகா் என பெயா் சூட்டினா்.

இந்த நகருக்கு செல்லும் முக்கிய போக்குவரத்துத் தடமாக உள்ள மேலமடை பாலத்துக்கு, நூற்றாண்டு காணவுள்ள தியாகி லட்சுமி காந்தன் பாரதியின் பெயரை சூட்டுவது மிகச் சிறந்தத் தோ்வாகவும், அவருக்கு அளிக்கும் அங்கீகாரமாகவும் இருக்கும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.