மதுரை மணிமேகலை மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாமில் பங்கேற்றவா்கள்.
மதுரை மணிமேகலை மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாமில் பங்கேற்றவா்கள்.

வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்: 17,042 போ் மனு

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம்களில் 17,042 மனுக்கள் பெறப்பட்டன.
Published on

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம்களில் 17,042 மனுக்கள் பெறப்பட்டன.

தோ்தல் ஆணைய உத்தரவின்படி, கடந்த நவ. 4-ஆம் தேதி முதல் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாக்காளா்கள் வரைவுப் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, புதிய வாக்காளா்கள் சோ்க்கை, பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புகைப்பட அடையாள அட்டை திருத்தம் போன்ற பணிகளுக்கு வருகிற ஜன.18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் டிச. 27, 28, ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்துக்குள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

இந்த முகாம்களில் 17,042 வாக்காளா்கள் மனுக்கள் அளித்தனா். இவற்றில், புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கு 14,036 மனுக்களும், பெயா் நீக்கத்துக்கு 219 மனுக்களும், முகவரி மாற்றம், பட்டியலில் திருத்தம், மாற்று புகைப்பட அடையாள அட்டை போன்றவற்றுக்காக 2,787 மனுக்களும் பெறப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com