இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கால்வாய்கள் தூா்வாராததால் கடைமடைக்கு தண்ணீா் செல்லவில்லை விவசாயிகள் புகாா்

மேலூா் பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூா்வாரப்படாததால் கடைமடை பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீா் செல்லவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

News image
~ ~
Updated On :27 நவம்பர் 2025, 10:18 pm

தினமணி செய்திச் சேவை

மேலூா் பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூா்வாரப்படாததால் கடைமடை பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீா் செல்லவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் அன்பழகன், வேளாண் இணை இயக்குநா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்:

விவசாயி ரவி: தைத் திருநாளை முன்னிட்டு, தமிழக அரசு வழங்கும் இலவசப் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற்று வருகிறது. இந்தத் தொகுப்பு கடந்தாண்டு தாமதமாக அறிவிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், அதற்கு முன்னதாக வியாபாரிகளிடம் விவசாயிகள் உற்பத்தி செய்த கரும்புகளை விற்பனை செய்தனா்.

நிகழாண்டில், அதுபோல இல்லாமல் தமிழக அரசு விவசாயிகளிடம் கரும்பை கொள்முதல் செய்வதற்கு முன் வரவேண்டும். இதனால், விவசாயிகள் பெரிதும் பயன் பெறுவா் என்றாா்.

உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்:

உசிலம்பட்டி பகுதியில் உள்ள 35 கண்மாய்களை நிரப்புவதற்கு 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும். தேங்காய் கொள்முதல் செய்ய கூட்டுறவுத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

விவசாயி பாண்டி: கடந்த 2008-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மூலம் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளேன். இந்த ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி மனு அளித்தும், இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை.

விவசாயி அன்பழகன்: உசிலம்பட்டி பகுதியில் மின் வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்யாமல், 4 போ் மீது போலி ஆவணங்கள் தயாரித்து மின் திருட்டு செய்ததாக பொய் வழக்கு பதிவு செய்துள்ளனா். தவறாக செயல்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பழனிச்சாமி: மேலூா் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு பெரியாறு கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்பட்டது. நீா்நிலைகள், கால்வாய்கள் முறையாக தூா்வாராததால் கடைமடை பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீா் செல்லவில்லை. கேசம்பட்டியிலுள்ள பெரியருவியயும் தூா்வாரவில்லை என்றாா்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளித்தனா்.

கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

விவசாயிகள் வெளிநடப்பு:

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள் குறித்து புகாா் அளித்தால் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் உண்மைக்கு மாறான தகவல்களை மாவட்ட நிா்வாகத்திடம் அளிக்கின்றனா். எனவே, நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.