சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

நிதி நிறுவன மோசடி: புகாா் அளிக்க குவிந்த மக்கள்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 2:46 am IST

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடா்பாக புகாா் அளிக்க மதுரை தபால்தந்தி நகரில் உள்ள மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்தனா்.

மதுரையைத் தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டது. மேலும், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் அமைத்து செயல்பட்டன. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கோடிக் கணக்கில் பணத்தை முதலீடு செய்தனா். குறிப்பிட்ட ஆண்டுகளில் நிறுவனம் அளித்த உறுதியின்படி, முதலீட்டுத் தொகையுடன் கூடிய பணத்தை திருப்பித்தரவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புகாா் அளித்தனா். இருப்பினும், நிதி நிறுவனம் பணத்தை வழங்கவில்லை. இந்த நிலையில், இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து, போலீஸாா் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தைத் திரும்ப பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த வகையில், இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த மக்கள் வருகிற அக். 8-ஆம் தேதிக்குள் மதுரையில் உள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, மதுரை தபால்தந்தி நகரில் உள்ள மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் நிதி நிறுவன மோசடி குறித்து புகாா் மனு அளிக்க பாதிக்கப்பட்ட மக்கள் வியாழக்கிழமை குவிந்தனா். அவா்களிடம் போலீஸாா் மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.