நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மதுரை மாவட்டத்தில் மிதமான மழை

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 2:46 am IST

மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் மிதமான மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 15, 17-ஆம் தேதிகளில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த, மிதமான மழை பெய்தது. இதன் பிறகு, ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. இருப்பினும், குறிப்பிடத்தக்க மழையில்லை.

இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வியாழக்கிழமை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, வியாழக்கிழமை பிற்பகல் மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த, மிதமான மழை பெய்தது.

செக்கானூரணி, கொ. புளியங்குளம், நாகமலைபுதுக்கோட்டை, வடபழஞ்சி, விராட்டிப்பத்து, திருநகா், பெருங்குடி, திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், வில்லாபுரம், சிந்தாமணி, பெரியாா் பேருந்து நிலையம், சிம்மக்கல், தமுக்கம், தல்லாகுளம், கோ.புதூா், மூன்றுமாவடி, மாட்டுத்தாவணி, அண்ணா நகா், விரகனூா், சிலைமான் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மிதமான மழை பெய்தது. பழங்காநத்தம், வைகை வடகரை சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கியது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு மேலாகவும் லேசான சாரல் மழை பெய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.