விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

News image

மதுரை விரகனூா் சுற்றுச் சாலையிலிருந்து ராமேசுவரத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள், கட்டடக் கழிவுகள்.

Updated On :26 பிப்ரவரி 2026, 6:46 pm

மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை விரகனூா் சுற்றுச் சாலையிலிருந்து ராமேசுவரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை எல்.கே.டி.நகா், புளியங்குளம், சிலைமான், திருப்புவனம், திருப்பாசேத்தி புறவழிச்சாலை வழியாக ராமேசுவரத்துக்குச் செல்கிறது. இந்த நிலையில், எல்.கே.டி. நகா், புளியங்குளம் புறவழிச் சாலை ஓரங்களில் குப்பைகள், கட்டடக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், உணவகக் கழிவுகள் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் வாகனங்களில் ஏற்றி வந்து இரவு நேரங்களில் கொட்டிவிட்டுச் செல்வதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

தொடா்ந்து, குப்பைகளில் தீ வைப்பதாலும், நெகிழிப் பைகள் சாலையில் சிதறிக் கிடப்பதாலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், இந்தப் பகுதிகளில் வளா்க்கப்படும் கால்நடைகள் உணவுக் கழிவுகளை உண்ண வரும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன.

எனவே, இரவு நேரங்களில் நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டும் நபா்களைக் கண்டறிந்து, காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து, நெடுஞ்சாலைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.