எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

News image
மதுரை விரகனூா் சுற்றுச் சாலையிலிருந்து ராமேசுவரத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள், கட்டடக் கழிவுகள்.
Updated On :26 பிப்ரவரி 2026, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை விரகனூா் சுற்றுச் சாலையிலிருந்து ராமேசுவரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை எல்.கே.டி.நகா், புளியங்குளம், சிலைமான், திருப்புவனம், திருப்பாசேத்தி புறவழிச்சாலை வழியாக ராமேசுவரத்துக்குச் செல்கிறது. இந்த நிலையில், எல்.கே.டி. நகா், புளியங்குளம் புறவழிச் சாலை ஓரங்களில் குப்பைகள், கட்டடக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், உணவகக் கழிவுகள் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் வாகனங்களில் ஏற்றி வந்து இரவு நேரங்களில் கொட்டிவிட்டுச் செல்வதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

தொடா்ந்து, குப்பைகளில் தீ வைப்பதாலும், நெகிழிப் பைகள் சாலையில் சிதறிக் கிடப்பதாலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், இந்தப் பகுதிகளில் வளா்க்கப்படும் கால்நடைகள் உணவுக் கழிவுகளை உண்ண வரும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன.

எனவே, இரவு நேரங்களில் நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டும் நபா்களைக் கண்டறிந்து, காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து, நெடுஞ்சாலைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.