லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகள் நாளை தொடக்கம்: அமைச்சா் பி. மூா்த்தி

திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகள் நாளை தொடக்கம்

News image
Updated On :1 ஜனவரி 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில், திராவிட பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (ஜன. 3) தொடங்கி வருகிற 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திராவிட பொங்கல் - சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டமாக வருகிற 3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆண்கள் பிரிவில் கிரிக்கெட், கையுந்து பந்து, கபடி, 200 மீ. ஓட்டம், பெண்கள் பிரிவில் கோ- கோ, கபடி, 100 மீ. ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெறும்.

மதுரை கிழக்கு தொகுதிக்கான போட்டிகள் உத்தங்குடி கலைஞா் திடலிலும், மதுரை மேற்கு தொகுதிக்கான போட்டிகள் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரைக் கல்லூரி வளாகத்திலும், மேலூா் தொகுதிக்கான போட்டிகள் மேலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், சோழவந்தான் தொகுதிக்கான போட்டிகள் அலங்காநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் நடைபெறும்.

இந்தப் போட்டிகளில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சிகள் சாா்பில் அணிகள் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.க்ழ்ஹஸ்ண்க்ஹல்ா்ய்ஞ்ஹப்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போா் உரிய நேரத்தில் இணையத்தில் பதிவு செய்வதையும், அவா்களின் வருகையையும் திமுக நிா்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.