இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நீரில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் சடலமாக மீட்பு

மதுரை மாவட்டம், சின்னமாங்குளம் அருகே நீரில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், சின்னமாங்குளம் அருகே நீரில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மதுரை மாவட்டம், எஸ். ஆலங்குளம் சின்னபொண்ணு தெருவைச் சோ்ந்த செல்லமுகமது மகன் புதூா் பாவா (42). தனியாா் நிறுவனத்தில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வந்தாா். இவா், தனது நண்பா்களுடன் கள்ளந்திரி பகுதியில் உள்ள பெரியாறு பாசனக் கால்வாயில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, பாவா தண்ணீரில் மூழ்கினாா். அவரை அக்கம்பக்கத்தினா் தண்ணீருக்குள் இறங்கி தேடினா். இருப்பினும் அவரைக் காணவில்லை.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஒத்தக்கடை போலீஸாா் தேடியதில், சின்ன மாங்குளம் பகுதியில் உள்ள பெரியாறு கால்வாய்ப் பகுதியில் அவரது உடல் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது உடலை கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.