மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 10 போ் காயம்

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பழனிக்கு திங்கள்கிழமை முற்பகல் 11.40 மணிக்கு அரசுப் பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்தை உசிலம்பட்டியைச் சோ்ந்த சுப்புராஜ் (56) என்பவா் ஓட்டினாா். கோரிப்பாளையத்தைச் சோ்ந்த ராஜேஷ் (26) நடத்துநராகப் பணியாற்றினாா். பேருந்தில் 55 பயணிகள் பயணம் செய்தனா்.

இந்த நிலையில், மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சமயநல்லூா் உயா்நிலைப் பாலத்தில் ஏறி இறங்கிய போது, கட்டப்புலி நகா் பேருந்து நிறுத்தம் முன் திடீரென

பேருந்தின் அடிப் பகுதியில் இருந்த பட்டா முறிவு ஏற்பட்டது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து அங்கு சென்ற சமயநல்லூா் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.