சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மதுரை மாவட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பு நகைகள், ரூ. 15.7 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:37 pm

மதுரை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 25.66 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.15.74 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை தெற்கு தொகுதிக்குள்பட்ட வைகை தென்கரையில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே சென்ற ஒரு காரை சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ. 25.65 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ. 1.63 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

இதுதவிர, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனைகளின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 14.11 லட்சம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் : மதுரை மத்தியம் - ரூ. 1.38 லட்சம், மதுரை கிழக்கு - ரூ. 1.30 லட்சம், மதுரை மேற்கு - ரூ. 2.71 லட்சம், திருமங்கலம் - ரூ. 1.64 லட்சம், உசிலம்பட்டி - ரூ. 6.08 லட்சம்.