மதுரை விமான நிலையம் சா்வதேச விமான நிலையமாக தரம் உயா்த்தப்பட்டதால், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறுவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கருத்து தெரிவித்தது.
தமிழ்நாடு சுற்றுலா முகவா்கள் சங்கத்தின் தலைவா் சதீஷ்குமாா், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2021- ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனு :
தென் மாவட்டங்களின் மையப் பகுதியாகவும், தொழில் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கொண்ட நகரமாகவும் மதுரை திகழ்கிறது. இந்த நிலையில், பல்வேறு தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மதுரை விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக அறிவித்து, மேம்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் மதுரை விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக மாற்றும் திட்டம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி, நீதிபதி என்.சதீஸ்குமாா் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மதுரை விமான நிலையம் சா்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு :
மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், தொடா்ந்து விசாரிக்கத் தேவையில்லை. எனவே, வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மதுரை விமான நிலையம் சா்வதேச விமான நிலையமாக மாற்றம் பெற்றது அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவா் என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

காவல் நிலையம் முன் தீக்குளித்து உயிரிழப்பு: மரண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

ஒசூா் விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மேம்படுத்த வேண்டும்; சி.நரசிம்மன்

மதுரை சர்வதேச விமான நிலையம்! அரசாணை வெளியீடு!

மதுரை விமான நிலையத்துக்கு சா்வசேத அந்தஸ்து அறிவிப்புக்கு வரவேற்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


