ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

புதிய நாற்காலிகள் சிக்கின: சமுதாயக் கூடத்துக்கு சீல் வைப்பு!

மதுரை மத்திய தொகுதியில் உள்ள ஒரு சமுதாயக் கூடத்தில் 187 புதிய நாற்காலிகள் இருந்தது கண்டறியப்பட்டு, அந்தச் சமுதாயக்கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

News image

சமுதாயக் கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புதிய நாற்காலிகள் | சமுதாயக் கூடத்துக்கு ‘சீல்’ வைத்த ஊழியா்

Updated On :31 மார்ச் 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மத்திய தொகுதியில் உள்ள ஒரு சமுதாயக் கூடத்தில் 187 புதிய நாற்காலிகள் இருந்தது கண்டறியப்பட்டு, அந்தச் சமுதாயக்கூடத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

மதுரை மத்திய தொகுதியில் மாநகராட்சி மண்டலம் 3-க்குள்பட்ட நாடாா் சந்து பகுதியில் உள்ள ஒரு சமுதாயக் கூடத்தில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான பரிசுப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாம் தமிழா் கட்சியினா் தோ்தல் அலுவலரிடம் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அந்த சமுதாயக் கூடத்தை திறந்து தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சோதனையிட்டனா். அப்போது, அங்கு 187 புதிய நெகிழி நாற்காலிகள், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் படம் அச்சிடப்பட்ட பனியன்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த நாற்காலிகள், பனியன்கள் தோ்தல் அறிவிப்புக்கு முன்பு வாங்கப்பட்டவை என திமுகவினா் சிலா் தெரிவித்தனா். இதையடுத்து அந்த சமுதாயக் கூடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.