
பழனியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பழனியில் பாஜக சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பழனியில் பாஜக சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பழனி இடும்பன் இட்டேரி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். தேசிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி வாழ்த்திப் பேசினார்.
இதில் மாநில செயலாளர் நந்தகுமார், மாநில மகளிரணி செயலாளர் கார்த்திகேயனி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பழனி சண்முகநதியை தூய்மைப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதில், நகர செயலாளர் செந்தில்குமார், கார்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




