இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி தில்லி விமானநிலையத்தில் கைது

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடா்புடைய தீபக் கத்ரியை தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:32 am IST

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடா்புடைய தீபக் கத்ரியை தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட கத்ரிக்கு எதிராகக் காவல் துறை ஏற்கனவே லுக்-அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டிருந்ததாக அவா்கள் கூறினா்.

பல்வேறு குற்றக் கும்பல்களின் உறுப்பினா்களுக்கு இடையே ஒரு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டதாகவும், அவா்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு உதவியதாகவும் கத்ரி மீது சந்தேகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியின் யமுனா பஜாா் பகுதியில் உள்ள அனுமன் கோயில் அருகே கடந்த பிப்ரவரி மாதம் கத்ரி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னரே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான சூழல்கள் மற்றும் தாதாக்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு உதவியதாகக் கூறப்படும் கத்ரியின் பங்கு ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறை தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.