டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

குழாய் உடைந்து 10 நாள்களாக வீணாகும் குடிநீர்

திண்டுக்கல் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை 10 நாள்களாகியும் சீரமைக்காததால் இதுவரை பல லட்சம் லிட்டர் குடிநீர், கழிவுநீருடன் கலந்து வீணாகி வருகிறது.

Updated On :8 அக்டோபர் 2018, 7:43 am IST

திண்டுக்கல் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை 10 நாள்களாகியும் சீரமைக்காததால் இதுவரை பல லட்சம் லிட்டர் குடிநீர், கழிவுநீருடன் கலந்து வீணாகி வருகிறது.
திண்டுக்கல் நகரில் தீராத பிரச்னையாக இருப்பது குடிநீர். பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் கிடைக்காமல், கடந்த சில நாள்களாக தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதனிடையே ஆத்தூர் காமராஜர்அணையிலிருந்து, திண்டுக்கல் நகருக்கு புதிய குழாய் பதிக்கும் ஜிக்கா திட்டம் ரூ.70 கோடி  செலவில் நிறைவேற்றப்பட்டது. 
புதிய குழாய் பதிக்கப்பட்ட பின் அனைத்து பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கும் என மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், புதிய குழாய் பதிக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், சில பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என முறையிட்டு வருகின்றனர். 
இந்நிலையில், காந்திமார்க்கெட் சாலை மற்றும் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளி சந்திப்பில், கடந்த 10 நாள்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக, மாநகராட்சி  நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் அந்த உடைப்பினை சரி செய்யப்படவில்லை. இதனால், நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர், கழிவுநீர் கால்வாயில் வீணாகிக் கொண்டிருப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர் கூறியது:  ஜிக்கா திட்டத்திற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அதனால், தண்ணீரை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடைப்பினை சரி செய்வதற்கு தேவையான உபகரணங்கள் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனாலும், அதனை சீரமைக்க வேண்டிய பணியினை ஜிக்கா திட்ட பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.