இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கொடைக்கானலில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த ஆட்சியர்

கொடைக்கானலில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். 

News image
மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி
Updated On :1 ஆகஸ்ட் 2020, 11:08 am

DIN

கொடைக்கானலில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். 

கொடைக்கானலில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் பணியில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொடைக்கானல் பகுதிகளான பாக்கியபுரம், அண்ணாநகர், டர்னர்புரம், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்கப்பட்டுள்ளதை ஆய்வு நடத்தினார். 

அதன்பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 தொடர்ந்து கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று  பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். 

இந் நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர் அரவிந்த், நகராட்சி ஆணையாளர் நாராயணன், மருத்துவ அதிகாரி அரவிந்த் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.