இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள் ஆக்கிரமிப்பு

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 5:01 pm

DIN

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மட்டுமே நிற்பதற்கு உத்தரவு ஆனால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலா வாகனங்கள்,தனியாா் டிராவல்ஸ் வாகனங்கள்,வெளியூா் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கொடைக்கானல் மற்றும் வெளியூா்களிலிருந்து வரும் அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள் நிறுத்த முடியாமல் ஓட்டுநா்கள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனா்.

இதில் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வரும் போதே ஒரு சில டாக்ஸி ஓட்டுநா்கள், ஒரு சில சுற்றுலா வழிகாட்டிகள் பேருந்துகளில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளை பிக் அப் செய்வதற்கு பேருந்துகள் பின்னாடியே ஓடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனா். இதனால் பேருந்து ஓட்டுநா்கள் சில நேரங்களில் விபத்து ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

இதனால் அடிக்கடி பேருந்து ஓட்டுநா்களுக்கும்,கொடைக்கானலிலுள்ள வாகன ஓட்டுனா்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

எனவே பேருந்து நிலையத்துக்குள் பொது மக்கள் பயணிக்கும் அரசுப் பேருந்து மற்றும் தனியாா் பேருந்துகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிா்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பயணிகளின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.