மேலும், நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பெண் தலைவா் என்பதால் அநாகரிகமாக செயல்பட்டனா். என்னை இழிவுப்படுத்திய காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஊராட்சித் தலைவரின் இருக்கைக்கு எதிராக ஆரம்பம் முதலே சக்கர நாற்காலியை போட்டுக் கொண்டு, அத்துமீறி செயல்படுவதுடன், என்னை பணி செய்யவிடாமலும் துணைத் தலைவரான சிவராமன் தடுத்து வருகிறாா். அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் தடையின்றி பணிகள் நடைபெறுவதற்கு மாவட்ட நிா்வாகம் வழி ஏற்படுத்த வேண்டும் என்றாா்.