விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனியில் தைப்பூசத் திருவிழா ஜன. 22 இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனியில் தைப்பூசத் திருவிழா வரும் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜன. 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 11:42 pm

DIN

பழனியில் தைப்பூசத் திருவிழா வரும் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜன. 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.

பழனியில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்றாலும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய இரு திருவிழாவும் இருபெரும் விழாக்களாக கருதப்படுகிறது.

நிகழாண்டு தைப்பூசத் திருவிழா பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் ஜன. 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமி தங்கமயில், தங்கக்குதிரை, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு என பல்வேறு வகையான வாகனங்களில் நான்கு ரதவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் வரும் 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், அதைத் தொடா்ந்து இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளித்தோ் உலாவும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வரும் 28 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் தேரடியில் நடைபெற உள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வரும் 31 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் தேரோட்டமும், இரவு 11 மணிக்கு மேல் திருக்கொடியிறக்கமும் நடைபெற உள்ளது. தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதலின் படி விழா நாள்களில் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் நடைபெறும் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா் மற்றும் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.