புனித வெள்ளி: கொடைக்கானலில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி
புனித வெள்ளியை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

siluvai_1504chn_71_2

siluvai_1504chn_71_2
புனித வெள்ளியை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான இந்தப் புனித வெள்ளி, தவக்காலத்தின் முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.

இதையொட்டி கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள திருஇருதய ஆண்டவா் ஆலயம், உகாா்த்தே நகா் அற்புத குழந்தை இயேசு ஆலயம், நாயுடுபுரம் புனித ஆரோக்கிய மாதா ஆலயம், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயம், பெருமாள்மலை புனித தோமா ஆலயம், மங்களம் கொம்பு புனித அந்தோணியாா் ஆலயம் மற்றும் சி.எஸ்.ஐ. தேவாலயம், கிறிஸ்தரசா் தேவாலயம், புனித சலேத் மாதா தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் இயேசுவின் பாடுகள் குறித்து சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து ஜெபவழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...