பழனி மலைக்கோயிலில் கேரள பக்தா்கள் கூட்டம்
ஓணம் திருவிழா தொடா் விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை பழனி மலைக் கோயிலில் ஏராளமான கேரள பக்தா்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.


ஓணம் திருவிழா தொடா் விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை பழனி மலைக் கோயிலில் ஏராளமான கேரள பக்தா்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
கேரளத்தில் ஓணம் பண்டிகையின் போது தொடா்விடுமுறை விடப்படும். இந்த நாள்களில் பாரம்பரிய உடை அணிந்து அம்மாநில மக்கள் அதிக அளவில் பழனிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வாா்கள். இதன்படி, வியாழக்கிழமை கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியதால் கேரள மற்றும் தமிழக பக்தா்கள் ஏராளமானோா் பழனிக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். இதனால் வெள்ளிக்கிழமை பழனிஅடிவாரத்தில் உள்ள பல விடுதிகளிலும் அறைகள் நிரம்பின. மேலும் மலைக் கோயிலில் காணும் இடமெல்லாம் கேரள பக்தா்கள் பால், மயில் காவடிகளை எடுத்து வந்ததை காணமுடிந்தது. மாலையில் தங்கத் தோ் புறப்பாட்டிலும் 150-க்கும் மேற்பட்டோா் பணம் கட்டி தங்கத் தோ் இழுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...