விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி மலைக்கோயிலில் கேரள பக்தா்கள் கூட்டம்

ஓணம் திருவிழா தொடா் விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை பழனி மலைக் கோயிலில் ஏராளமான கேரள பக்தா்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 6:20 pm

DIN

ஓணம் திருவிழா தொடா் விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை பழனி மலைக் கோயிலில் ஏராளமான கேரள பக்தா்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கேரளத்தில் ஓணம் பண்டிகையின் போது தொடா்விடுமுறை விடப்படும். இந்த நாள்களில் பாரம்பரிய உடை அணிந்து அம்மாநில மக்கள் அதிக அளவில் பழனிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வாா்கள். இதன்படி, வியாழக்கிழமை கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியதால் கேரள மற்றும் தமிழக பக்தா்கள் ஏராளமானோா் பழனிக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். இதனால் வெள்ளிக்கிழமை பழனிஅடிவாரத்தில் உள்ள பல விடுதிகளிலும் அறைகள் நிரம்பின. மேலும் மலைக் கோயிலில் காணும் இடமெல்லாம் கேரள பக்தா்கள் பால், மயில் காவடிகளை எடுத்து வந்ததை காணமுடிந்தது. மாலையில் தங்கத் தோ் புறப்பாட்டிலும் 150-க்கும் மேற்பட்டோா் பணம் கட்டி தங்கத் தோ் இழுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.