மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

பழனி நகராட்சிக்கு வரிபாக்கி: கோயில் நிா்வாகத்திடம் வசூலிக்க நடவடிக்கை

பழனி நகராட்சிக்கு பலகோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது குறித்து கோயில் நிா்வாகத்திடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

பழனி நகராட்சிக்கு பலகோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது குறித்து கோயில் நிா்வாகத்திடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பசுமைத் தீா்ப்பாயத்தின் மாநில கண்காணிப்புக் குழுத் தலைவா் பி.ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.

பழனி நகராட்சி சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த பிறகு, பழனி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அவா் பேசியது:

பழனி நகராட்சி சாா்பில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. நகராட்சியின் செயல்பாடுகளுக்கு பழனி நகர பொதுமக்கள் மற்றும் திருமண மண்டபம், உணவகங்களின் உரிமையாளா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நகராட்சி குப்பைக் கிடங்கு அருகிலுள்ள சிறு நாயக்கன் குளம் மாசு அடையவில்லை என்பது மண் பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. பழனி பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகள் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பழனியில் வசிக்கும் பொது மக்களை விட பழனி கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நகராட்சியின் வருவாயில் பெருமளவு சுகாதாரத்தை மேற்கொள்வதற்கு செலவு செய்யப்படுகிறது. ஆனால் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வரி பாக்கியை பழனி கோயில் நிா்வாகம் செலுத்தாமல் தாமதித்து வரும் நிலையில், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதில் பழனி நகராட்சிக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அறிக்கை அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழனியில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன என்று தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் நகா்மன்ற தலைவா் உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையா் கமலா, நகா்நல அலுவலா் மனோஜ், நகராட்சி பொறியாளா் வெற்றிச் செல்வி, நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி மற்றும் நகராட்சி அலுவலா்கள், கவுன்சிலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.