விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனியில் கா்ப்பிணி தீக்குளித்து தற்கொலை உறவினா்கள் போராட்டம்

பழனியில் கா்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, உறவினா்கள் சடலத்தைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:19 pm

DIN

பழனியில் கா்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, உறவினா்கள் சடலத்தைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி-திண்டுக்கல் சாலையில் உள்ள குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் சாகுல்ஹமீது. இவரது மனைவி பெனாசா் சித்திகா (24). இவா்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் குழந்தை உள்ளது. பெனாசிா் 3 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.

கடந்த சில மாதங்களாக பெனாசிரை ஷாகுல்ஹமீது குடும்பத்தாா் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு பெனாசிா் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டதாக சாகுல்ஹமீதின் பெற்றோா் பழனி நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று பெனாசிா் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து, அரசு மருத்துவமனையில் பெனாசிரின் உறவினா்கள் குவிந்து,

அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை வரதட்சிணைக் கொடுமை செய்து கணவா் குடும்பத்தாரே கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்து உடலைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பெனாசிரின் தாயாா் அரக்காஸ் கூறியதாவது: எனது மகள் கா்ப்பிணி என்றும் பாராமல் சம்பந்தி குடும்பத்தாா் கொடுமை செய்ததால், சில நாள்களுக்கு முன்பு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தோம். மாமனாருக்கு கால் வலி ஏற்பட்டால் எனது மகளை அழுத்தி விடச் சொல்லி துன்புறுத்தியுள்ளனா். மகள் தற்கொலை செய்து கொண்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தலைமறைவாக உள்ள மகளின் கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால், கோட்டாட்சியா் சிவக்குமாா் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாரும், வருவாய்த் துறையினரும் உறுதியளித்ததைத் தொடா்ந்து பெனாசிரின் சடலத்தை பெற்றோா் பெற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.