மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

ஆயக்குடி ஓபுளாபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
ஆயக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வேலம்மாள்.
Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:16 am

Din

பழனியை அடுத்த ஆயக்குடி ஓபுளாபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழைய ஆயக்குடி ஒபுளாபுரம் எட்டாவது வாா்டை சோ்ந்தவா் சுப்பன் மனைவி வேலம்மாள் (55). விவசாயக் கூலி வேலை செய்து வந்த இவா், வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தை தொட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதில், பலத்த காயமடைந்த இவரை பழனி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதித்தனா். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொடுண்டு வருகின்றனா்.