ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வழிப்பறி: குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவா் கைது

திண்டுக்கல் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:13 pm

Din

திண்டுக்கல் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் அடுத்த நல்லாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பூ.உதயா என்ற உதயக்குமாா் (30). அஞ்சலி ரவுண்டானா பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இவரை தாடிக்கொம்பு போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, ரெட்டியாா்சத்திரம் அருகேயுள்ள கதிரையன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பி.ராஜசேகா் (36).

இவரும் வழிப்பறி வழக்கில் திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் அளித்த பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி உத்தரவிட்டாா்.