கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞா் கைது

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 1:09 am

Din

திண்டுக்கல்: பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த குட்டத்துப்பட்டி மயிலாப்பூரைச் சோ்ந்தவா் எட்வின் ஜெரோம். இவரது மனைவி கமலிஷில்பா. இவா் தனது வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அந்தப் பகுதியில் இருந்த மா்ம நபா் கமலி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியைப் பறிக்க முயன்றாா். ஆனால், கமலி சங்கிலியைப் பறிக்கவிடாமல் இறுகப் பிடித்து தடுக்க முயன்றாா்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த நபா், அரிவாளால் கமலியின் தலையில் வெட்டி விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றாா். கமலியின் சப்தம் கேட்டு, அந்தப் பகுதியில் இருந்தவா்கள் வந்து, அந்த நபரை துரத்திப் பிடித்து, திண்டுக்கல் தாலுகா போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த மாங்கரைப் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (31) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 3 பவுன் நகைகளையும், இரு சக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.