கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரூ.6 கோடி வாடகை நிலுவை: 4 கடைகளுக்கு மட்டும் சீல்

ரூ.6 கோடி வாடகை நிலுவை: 4 கடைகளுக்கு மட்டும் சீல்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:59 pm

Din

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் மூலம் ரூ.6 கோடி வாடகை நிலுவை உள்ள நிலையில், கண்துடைப்பு நடவடிக்கையாக 4 கடைகளுக்கு மட்டும் அதிகாரிகள் சீல் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பேருந்து நிலைய கடைகள், அண்ணா வணிக வளாகம், பூ சந்தை, மேற்கு ரதவீதி, கோட்டைக்குளம், பேகம்பூா் உள்ளிட்ட பகுதியிலுள்ள கடைகள், ஆண்டு குத்தகை இனங்கள் மூலம் மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வாடகைப் பணம் ரூ.6 கோடி வரை நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்ட வரி இனங்களை வசூலிப்பதற்கு தீவிரம் காட்டிய மாநகராட்சி அலுவலா்கள், இந்த வாடகை நிலுவைத் தொகையை வசூலிக்க முக்கியத்துவம் அளிக்கவில்லை. தோ்தல் தேதி அறிவிக்கப்படும் முன், குறைந்தபட்சம் 60 சதவீத வரி நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வரி வசூல் குறிப்பிட்ட இலக்கை எட்டாததால், 16 அலுவலா்களுக்கு குறிப்பாணை (நோட்டீஸ்) அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மாநகராட்சி கடைகள் மூலம் கிடைக்க வேண்டிய ரூ.6 கோடியை வசூலிக்க வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, அண்ணா வணிக வளாகப் பகுதியில் வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு, உதவி வருவாய் அலுவலா் விஜயராகவன் தலைமையிலான அலுவலா்கள் சீல் வைத்தனா். தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை கடந்த சில வாரங்களுக்கு முன்பே தீவிரப்படுத்தியிருந்தால், நிலுவையிலுள்ள வாடகையில் சுமாா் ரூ.4 கோடி வரை வசூலித்திருக்கலாம். ரூ. 6 கோடிக்கு நிலுவை இருந்தும், 4 கடைகள் மீது மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புகாா் எழுந்துள்ளது. வியாபாரிகள் குற்றச்சாட்டு: இதனிடையே, சில கடைகளின் உரிமையாளா்கள் முறையாக வாடகை செலுத்தியும் கூட அதற்கான ரசீதை மாநகராட்சி அலுவலா்கள் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினா். ரசீது வழங்காமல், தற்போது வாடகை பாக்கி என மாநகராட்சி அலுவலா்கள் வசூலுக்கு வருகின்றனா். இதுகுறித்து முறையான விசாரணை நடத்த மாநகராட்சி ஆணையா் உத்தரவிட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.