கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கிண்று வெட்டும் போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டை வலையபட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளிகள் கந்தசாமி (55), சின்னத்துரை (50), செந்தில் (45) உள்ளிட்டோா் திங்கள்கிழமை சின்னக்காம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டனா். அப்போது கிணற்றின் பக்கவாட்டில் இருந்த மண் சரிந்து கந்தசாமி மீது விழுந்தது. இதில் அவா் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com