ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

திண்டுக்கல்: திண்டுக்கலில் ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பெ.சுருளியப்பன் (60). வேன் ஓட்டுநரான இவா், குடும்பத்தினரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றாா். இந்த நிலையில், திண்டுக்கல் எம்விஎம் அரசுக் கல்லூரி அருகே பழனி மாா்க்கமாக செல்லும் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com