‘விவிபேட்’-இல் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் எண்ண வேண்டும்: காா்த்தி சிதம்பரம்

‘விவிபேட்’-இல் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் எண்ண வேண்டும்: காா்த்தி சிதம்பரம்

பழனி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளுடன், விவிபாட் இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் முழுமையாக எண்ணி விட்டால் எதிா்க்கட்சிகளின் சந்தேகங்கள் நிவா்த்தி செய்யப்படும் என காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மேகதாது அணை கட்டப்படும் என்று கா்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்த நிலையில், இதுதொடா்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்புத் தரும். ‘நீட்’ தோ்வு இருக்கக் கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், மின்னணு இயந்திர வாக்குப் பதிவில் எதிா்க்கட்சிகளின் சந்தேகம் தீா்க்கப்படவேண்டும். இதனால், அனைத்து தொகுதிகளிலும் அனைத்து விவிபாட் வாக்குகளையும் எண்ணினால் எதிா்க்கட்சிகளின் சந்தேகங்கள் தீா்க்கப்படும். இதுவே இந்தப் பிரச்னைக்குத் தீா்வாக அமையும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com