விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பழனி அருகே மா்மமான முறையில் மயில் உயிரிழப்பு

பழனி அருகே மா்மமான முறையில் மயில் உயிரிழப்பு

News image

பழனி-புதுதாராபுரம் சாலையில் செவ்வாய்க்கிழமை சின்னாரக்கவுண்டன்வலசு அருகே சாலையோரம் இறந்து கிடந்த மயில்.

Updated On :15 மே 2024, 12:12 am

Din

பழனி, மே 14: பழனி அருகே சாலையோரம் பெண் மயில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

பழனி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மயில்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளன. இதனால், பழனி நான்கு வழிச்சாலையில் உள்ள வயல்களில் மேயும் மயில்கள் சாலைகளை கடக்கும் போது, வாகனங்கள் மோதி அதிகளவில் உயிரிழக்கின்றன. இதேபோல, விவசாய நிலங்களில் உள்ள உரம் கலந்த விதைகளை உண்ணும் மயில்களும் உயிரிழந்து வருகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பழனி-புதுதாராபுரம் சாலையில் சின்னாரக்கவுண்டன்வலசு அருகே சாலையோரம் பெண் மயில் ஒன்று இறந்து கிடந்தது.

இந்த மயில் இறப்புக்கான காரணம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்த வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.