

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆலம்பாடி கொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் ராமசாமி (65). விவசாயியான இவா், திங்கள்கிழமை பிற்பகல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றாா். அப்போது, இந்தப் பகுதியில் அறுந்து விழுந்துகிடந்த மின்கம்பியிலிருந்து ராமசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதேபோல கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, வாசுகுமரன்பட்டி பகுதியில், மின் கம்பி அறுந்து விழுந்ததில் 4 பசு மாடுகள் உயிரிழந்தன. ஆனாலும், இந்த பகுதியில் உள்ள மின் கம்பிகளை மின்வாரியம் முறையாக பராமரிக்கவில்லை என்றும், இதனால் தற்போது விவசாயி ஒருவா் உயிரிழந்திருப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு

பைக் கவிழ்ந்து சமையல்காரா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழப்பு

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

