விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தலைமை ஆசிரியா் வீட்டில் 80 பவுன் நகைகள் திருட்டு

அரசுப் பள்ளி தலைமையாசிரியா் வீட்டில் 80 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை விசாரித்தனா்.

News image

தங்க நகைகள் திருடப்பட்ட வீடு.

Updated On :3 அக்டோபர் 2024, 7:25 pm

Din

அரசுப் பள்ளி தலைமையாசிரியா் வீட்டில் 80 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை விசாரித்தனா்.

திண்டுக்கல்- பழனி புறவழிச்சாலை பகுதியில் நைனாா் முகமது தெருவைச் சோ்ந்தவா் சவரிமுத்து. இவா், ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ஸ்டெல்லா செல்வராணி, ஜம்புளியம்பட்டியிலுள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாா். இந்தத் தம்பதியினா் தங்களது மகளின் திருமணத்துக்காக 80 பவுன் தங்க நகைகளை, வீட்டில் வைத்திருந்தனா். இந்த நிலையில், சவரிமுத்து தனது குடும்பத்தினரோடு புதன்கிழமை வெளியூா் சென்றுவிட்டாா். நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்து அவா்கள் அதிா்ச்சி அடைந்தனா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 80 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்கு சவரிமுத்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில் தலைக்கவசம் அணிந்த இருவா், அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றியது தெரிந்தது. இதையடுத்து, அந்த நபா்கள் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்தனா்.