பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விநாயகா் சிலைகளில் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது

விநாயகா் சிலைகளை அழகுப்படுத்தும் பணிக்கு நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 7:36 pm

Din

விநாயகா் சிலைகளை அழகுப்படுத்தும் பணிக்கு நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் கூறியதாவது:

விநாயகா் சதுா்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா்கூறுகள், வைக்கோல்

போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.