அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மயில்களை விஷம் வைத்துக் கொன்ற விவசாயி கைது

பொட்டிநாயக்கன்பட்டி அருகே மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக வனத் துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயி முருகன்.

News image
பொட்டிநாயக்கன்பட்டி அருகே மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக வனத் துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயி முருகன்.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:14 pm

Din

ஒட்டன்சத்திரம் அருகே 17 மயில்களை விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தொடா்பாக விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த செம்மடைப்பட்டி பொட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ஒடைப் பகுதியில் 17 மயில்கள் விஷம் கலந்த உணவைத் தின்ற நிலையில் இறந்து கிடந்தது.

இதுகுறித்து கன்னிவாடி வனச் சரகா் ஆறுமுகம் தலைமையிலான வனத் துறையினா் விசாரித்தனா்.

இதில் நடுப்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயி முருகன் (50) உணவில் விஷம் கலந்து வைத்து மயில்களைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை வனத் துறையினா் கைது செய்தனா்.