விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பூலத்தூா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம்

மாணவா் தற்கொலை விவகாரத்தில் கொடைக்கானல் அருகேயுள்ள பூலத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 9:44 pm

Din

மாணவா் தற்கொலை விவகாரத்தில் கொடைக்கானல் அருகேயுள்ள பூலத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பூலத்தூா் பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் ராஜபாண்டி (16). இவா் நிலக்கோட்டையில் உள்ள பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வந்தாா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 11- ஆம் தேதி தான் பத்தாம் வகுப்பு படித்த பூலத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்குச் சென்று, மதிப்பெண் சான்றிதழ் கேட்டாா். அப்போது தலைமை ஆசிரியா் செளந்திரபாண்டியன் மாணவரைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டுக்கு வந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இருப்பினும், இதுதொடா்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, மாணவா் இறப்புக்குக் காரணமான தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பூலத்தூா் ஊராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, பூலத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களிடம் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், பூலத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் செளந்திரபாண்டியனை விராலிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்டக் கல்வி அலுவலா் பரிமளா புதன்கிழமை உத்தரவிட்டாா்.