இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரத்தில் தலைமைக் காவலா் தீடீா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:28 pm

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரத்தில் தலைமைக் காவலா் தீடீா் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாகத் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவா் சரவணன் (45). இவா், வெள்ளிக்கிழமை வழக்கம் போல அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

அருகில் இருந்த மற்ற காவலா்கள் உடனடியாக சரவணனைஅருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சரவணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இவருக்கு மனைவி கெளதமி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இவருடைய இறுதிச் சடங்கு, சொந்த ஊரான

நீலமலைக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட லட்சுமிபுரத்தில் அரசு மரியாதையுடன் சனிக்கிழமை (டிச.20) காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.