புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ரயிலில் 11 கிலோ கஞ்சா மீட்பு: போலீஸாா் விசாரணை

கோவையிலிருந்து திண்டுக்கல் வந்த விரைவு ரயிலில் கிடந்த 11 கிலோ கஞ்சாவை, ரயில்வே போலீஸாா் மீட்டனா்.

News image

மீட்கப்பட்ட 11 கிலோ கஞ்சாவுடன் திண்டுக்கல் ரயில் நிலைய போலீஸாா்

Updated On :30 ஜூலை 2025, 4:57 am IST

கோவையிலிருந்து திண்டுக்கல் வந்த விரைவு ரயிலில் கிடந்த 11 கிலோ கஞ்சாவை, ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

கோவை - நாகா்கோவில் இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த ரயில், திண்டுக்கல் - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கல்லில் நிறுத்தப்படுகிறது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்ட விரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு வந்தது.

இதையடுத்து, திண்டுக்கல் ரயில் நிலைய காவல் ஆய்வாளா் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீஸாா், ரயிலில் சோதனை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், ரயிலின் ஒரு பெட்டியில் கிடந்த 6 பொட்டலங்களைப் பிரித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அதில் 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களிலுள்ள ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

மேலும், கைப்பற்றப்பட்ட 11 கிலோ கஞ்சா, திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.