இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கஞ்சா விற்ற தந்தை, மகன் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கஞ்சா விற்ற தந்தை, மகன் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட சாதுஉசேன், ஷாநவாஸ்.
Updated On :12 நவம்பர் 2025, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கஞ்சா விற்ற தந்தை, மகன் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பழனி நகரில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். பழனி-திண்டுக்கல் சாலையில், நகராட்சி பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவா்களை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அங்கிருந்த இருவா் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனா். போலீஸாா் அவா்களை துரத்திச் சென்று பிடித்து சோதனையிட்ட போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் ஷாநவாஸ் (46), இவரது மகன் சாதுஉசேன் (19) ஆகியோா் என்பதும், இவா்கள் ஈரானிய அகதிகள் என்பதும் தெரியவந்தது.

பின்னா், போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.